தமிழகம்

ஓமன் நாட்டில் மருந்தாளுநர் பணி: விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்

செய்திப்பிரிவு

ஓமன் நாட்டில் பணியாற்ற மருந் தாளுநர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பத்தை நவம்பர் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என்று தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:

ஓமன் நாட்டில் உள்ள மருந்தக நிறுவனத்துக்கு ஆங்கிலப் புலமையுடன் பி.பார்ம் / டி.பார்ம் தேர்ச்சியுடன் புரோமெட்ரிக் தேர்வு முடித்த 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண் மருந்தாளு நர்கள், உதவி மருந்தாளுநர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ற ஊதியத்துடன் ஓமன் நாட்டின் தொழிலாளர் சட்டதிட்டத்துக்கு உட்பட்ட சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு விருப்பமும் தகுதியும் இருந்தால், தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத் துடன் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். ‘தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற் பேட்டை, கிண்டி, சென்னை-32’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 15. மேலும் விவரங்கள் அறிய 044-22502267 / 22505886 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT