தமிழகம்

பட அதிபர் மதன் மாயமான விவகாரம்: பாரிவேந்தரிடம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

பட அதிபர் மதன் மாயமான விவ காரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல் கலைக்கழக வேந்தர் பாரிவேந்த ரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு விசாரணை நடத்தினர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப் பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர் களும் பாரிவேந்தர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மதனை கண்டு பிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன்பேரில், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

மதன் மாயமான வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், ‘எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவ தாகத்தான் மதன் பணம் பெற்றுள் ளார் என்று 111 புகார் மனு கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தருக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (பழைய கமிஷனர் அலுவலகம்) நேற்று மாலை பாரிவேந்தர் வந்தார். அவரிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக தலைவர் ரவி பச்சமுத்து, மதனின் நண்பர் ரங்கபாஷ்யம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அலு வலர் சண்முகம் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT