மூளைச்சாவு அடைந்த பொறியி யல் பட்டதாரியின் உடல் உறுப்பு கள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்தவர் நல்லய்யா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஸ்வரன் (25). பொறியியல் பட்டதாரியான இவர் அம்பத்தூரில் தங்கி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 30-ம் தேதி பாடி அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இதில் தலை யில் பலத்த காயமடைந்த விக் னேஸ்வரன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் குழுவி னர் அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர்.
தானமாக பெறப்பட்ட உறுப்பு கள் சென்னையில் பல்வேறு மருத் துவமனைகளில் சிகிச்சைப் பெறும் 6 நோயாளிகளுக்கு பொருத் தப்பட்டன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.