தமிழகம்

23 இந்திய மீனவர்கள் காவலை நீட்டித்தது இலங்கை நீதிமன்றம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரின் காவலை, அக்டோபர் 28-ம் தேதி வரையில் நீட்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளிலிருந்து, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்களும், அக்டோபர் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தமிழக மீனவர்கள் 23 பேரின் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் யாழ்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிழக மீனவர்களை விசாரணை செய்த யாழ்ப்பாணம் ஊர்காவல் துறை நீதிபதி மகேந்திரராஜா இந்த 23 மீனவர்களின் காவலை அக்டோபர் 28-ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT