தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "தமிழகத்தின் நீட் தேர்வு முடிவுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு முடிவுகளுக்கு நான் மாணவர்களை குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆசிரியர்கள்தான் இந்த முடிவுகளுக்கு காரணம்.
பாடத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் நமக்கு நல்ல பாடத்தை அளித்துள்ளன" என்றார்.