முத்துராமலிங்கத் தேவரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்துராமலிங்கத் தேவரின் 107வது பிறந்தநாளையொட்டி, 30-10-2014 வியாழக்கிழமை, காலை 11.00 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.