42 நாட்கள் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை போலீஸார் கைது செய்து கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல் வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத் தியது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் கடந்த மே மாதம் 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் மே மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே, மே 9-ம் தேதி காலை சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்க தனிப்படை போலீ ஸார், 10-ம் தேதி காலை விமானத் தில் சென்னை வந்தனர். தன்னை கைது செய்வதற்காக தனிப்படை வருவதை அறிந்த நீதிபதி கர்ணன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் காரில் 9-ம் தேதி நள்ளிரவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, தடா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொல்கத்தா போலீஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் ஆந்திரா சென்றனர். ஆனால், கர்ணனை அவர்களால் பிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டனர்.
சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் முதல் தெருவில் நீதிபதி கர்ணனின் மகன் சுகன் (37), அவரது கார் ஓட்டுநர், கர்ணனின் உறவினர்கள், நண்பர்கள் என சென்னையில் பல இடங்களில் கொல்கத்தா போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த கர்ணனை கொல்கத்தா போலீஸார் நேற்று முன்தினம் இரவில் (20-ம் தேதி) சுற்றி வளைத்து கைது செய்தனர். கர்ணனின் 42 நாள் தலைமறைவு வாழ்க்கை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது.
அவரை இரவே விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ஓர் அறையில் கர்ணனை தங்க வைத்தனர். பின்னர் நேற்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா வுக்கு விமானம் மூலம் அழைத்து சென்றனர்.
விமான நிலையத்தில் நிருபர் களுக்கு பேட்டியளித்த கர்ணன், “நீதித்துறையில் நிறைய முறைகேடு கள் நடக்கின்றன. அவற்றை சுட்டிக் காட்டியதற்காக என்னை கைது செய்கின்றனர். ஒரு நீதிபதியை கைது செய்ய குடியரசுத் தலைவ ரின் ஒப்புதல் வேண்டும். அதை போலீஸார் மீறுகின்றனர்” என்றார்.
3 நாட்களுக்கு முன்பு
சென்னை விமான நிலையத்தில் மேற்கு வங்க டிஜிபி ராஜ் கனோ ஜியா நிருபர்களிடம் கூறும்போது, “கர்ணன் தலைமறைவாக இருக் கும் இடத்தை 3 நாட்களுக்கு முன்னதாகவே கண்டுபிடித்து விட்டோம். உறவினர்களுடன் கர்ணன் பேசிய செல்போன் உரையாடல்களை வைத்துத்தான் அவர் தலைமறைவாக இருந்த இடத்தை கண்டுபிடித்தோம். எனது பணிக்காலத்தில் நான் சந்தித்த தனித்தன்மையான வழக்கு இது. கர்ணனை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது” என்றார்.
நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் கடந்த 12-ம் தேதியுடன் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைப்பு
நேற்று பிற்பகல் 2.30 மணி யளவில் கர்ணன் கொல் கத்தா கொண்டு செல்லப்பட்டார். கர்ணனை கொல்கத்தா நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரது வழக்கறிஞர், “நீதிபதி ஒருவரை கைது செய்து, சிறையில் அடைக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும்” என்றார். அதற்கு நீதிபதி, “தற்போது கர்ணன் முன்னாள் நீதிபதிதான்” என்றார். அதைத் தொடர்ந்து கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் கர்ணன் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்து உறவினர்கள்
கர்ணனின் உறவினர்கள் சிலர் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் உதவியுடன்தான் கோவையில் தங்கியிருந்தார் கர்ணன். கர்ணனின் உறவினர்கள் செல்போன் எண்களை தொடர்ச்சி யாக ஆய்வு செய்ததன்பேரிலேயே அவர் சிக்கியிருக்கிறார். இதற்கு தமிழக போலீஸார் உதவி யுள்ளனர்.