வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூரில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், நாகை அருகே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.