அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார். கட்சியினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக திடீரென வந்த அவர் 5 நிமிடம் மட்டுமே அங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றார்.
சங்கரமடம் வந்த டி.டி.வி.தின கரனின் பயணம் மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது. கட்சியினருக்கோ, செய்தியாளர் களுக்கோ தகவல் தெரிவிக்கப் படவில்லை.
இதுகுறித்து அறிந்த செய்தி யாளர்கள், போலீஸார் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
தினகரன் சங்கர மடம் வருவது எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிந்தது. அவர் மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தார். விஜயேந்திரரை சந்தித்தாரா இல் லையா என்ற விவரம் தெரிய வில்லை. அவர் உடனடியாக மடத் தில் இருந்து வெளிவந்து சென்னை சென்றுவிட்டார். போலீஸ் பாது காப்பு உள்பட எதுவும் கேட்கப் படவில்லை. அவருடன் ஓரிருவர் மட்டுமே வந்தனர் என்றனர்.
இது தொடர்பாக சங்கர மடத்தில் கேட்டபோது தினகரன் என்ற முக்கிய பிரமுகர் ஒருவர் வந்தார். அவர் அதிமுக துணைப் பொதுச் செயலர் தினகரனா என்பது தெரியாது. அவர் இங்கு யாருடனும் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை. பெரியவரிடம் ஆசிபெற்றுவிட்டு சென்றுவிட்டார் என்றனர்.