பழநியை சேர்ந்த பச்சைமுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பழநி தண்டாயுதபாணி கோயில்ஊழியராக 1988-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். 2012-ல் பணி ஓய்வு பெற்றேன். பணிக்கொடை கேட்டு நான் மனு அளித்தேன். கோயில் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் எனக்கு பணிக்கொடை கேட்டு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பணிக்கொடை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட் டிருந்தது.
பழனி கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோவிந்தராஜ், மதனகோபால் ஆகியோரும் பணிக் கொடை கேட்டு மனு தாக்கல் செய் தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி டி.ராஜா நேற்று பிறப்பித்த உத்தரவு:
கோயில் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் இரு வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. தடை விதிக் கப்படவில்லை. எனவே 1972-ம் ஆண்டின் பணிக்கொடை சட்டத்தின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு 8 வார காலத்தில் பணிக்கொடை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.