வெப்பசலனம் காரணமாக தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய் யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் தேவாலா, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.
“அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் தூறல் விழும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.