தமிழகம்

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 293 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில், நெடுந்தீவு பகுதியில் ஒரு படகில் மீன்பிடித்த கே.தியாகு(42), எ.மணி(27), பி.பாலா(27), எஸ்.சந்திரன்(47) ஆகியோரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து, மே 30-ம் தேதி கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT