தமிழகம்

ஆகஸ்ட் 15-ல் மதுக்கடைகளை மூட உத்தரவு

செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எஃப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எஃப்எல்-3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று மதுபானம் விற்கக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT