தமிழ் திரைப்படத் தயாரிப் பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நேற்று சென்னையில் தொடங்கப் பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட வர்த்தகச் சபை தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து அபிராமி ராமநாதனிடம் கேட்ட போது, “ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே திரைப்பட வர்த்தக சபை உள்ளது. தமிழ கத்தில் இதுபோல் ஓர் அமைப்பு இருந்தால்தான் விநியோகஸ் தர்கள், திரையரங்கு உரிமை யாளர்கள் என ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களாக இதில் இருப் பார்கள். ஆகவே இது கூட்டமைப் பாக மாறிவிடும்.
தமிழ் திரையுல கில் வரும் பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டமைப்பு ஒன்றுகூடி தீர்வு காண முயற்சிக்கும். அனை வருமே உறுப்பினர்களாக இருப்ப தால் சுலபமாக தீர்வும் காண முடியும். ஆனால், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது 4 மாநிலங்களை உள்ளடக்கியது.
அதில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த வர் தலைவராக இருப்பார். அது ஒட்டுமொத்தமாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக உள்ளது. அதில் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” என்று தெரிவித்தார்.