தமிழகம்

நெல்லை, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்கள்

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், திருநெல்வேலியில் இருந்து வரும் 29-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.45-க்கு எழும்பூரை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 25-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82621) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 29-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82622) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

SCROLL FOR NEXT