வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.