பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி சந்திக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரியும், தண்டனைக்கு தடை கோரியும் ஜெயலலிதா சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். அவர் ஜெயலலிதாவை சந்திக்கயிருக்கிறார்.