தமிழகம்

அரசு பேருந்தில் பயணிகளுக்கு இடையூறாக ரகளை; புதுக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது: இடைநீக்கம் செய்தது கல்லூரி  

செய்திப்பிரிவு

சென்னை ராயப்பேட்டையில் அரசுப்பெருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறாக ரகளை செய்து, தொல்லைக் கொடுத்து பயணம் செய்ததாக புகாரின்பேரில் புதுக்கல்லூரி மாணவர்கள் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி இடைநீக்கம் செய்தது.

சென்னையில் கல்லூரிகள் இந்த மாதம் திறக்கப்பட்டது. கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளே பஸ்டே கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 24 மாணவர்களை போலீஸார் பிடித்தனர். இதில் 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 9 மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்தார்.

பேருந்தில் ரகளையில் ஈடுபட்டாலோ, பஸ்டே கொண்டாடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 25G பேருந்து நேற்று ராயப்பேட்டை அருகே சென்றது.

அதில் ஏறி பாட்டுப்பாடி, பேருந்தை தட்டிக்கொண்டும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதைப்பார்த்த பயணிகள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போலீஸார் அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 1.அஷ்ரப் அலி (20), புதுக்கோட்டை புதுக்குளத்தைச் சேர்ந்த பயாஸ் (18), வானகரத்தைச் சேர்ந்த முகமது  பர்கான்(19), ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த முகமது ஆருண்(18), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான்(20)

அஸ்லாம் (19), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகமது பகிம்(18)வடபழனியைச் சேர்ந்த முகமது முபாரக் (17) கே.கே.நகரைச் சேர்ந்த சையத் அன்வர்(18) ஆகிய 9 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 9 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. 9 பேரையும் இடைநீக்கம் செய்த உத்தரவின் நகலை போலீஸாருக்கு கல்லூரி முதல்வர் அனுப்பியுள்ளார்.

உட்ஸ்ரோடு பேருந்து நிருத்தம் வரும்போது பஸ்சை தட்டியதாக மேற்படி மாணவர்களை சுமார் 09:50 மணிக்கு நிலையம் அழத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT