இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் களின் விசைப்படகுகள் யாழ்ப் பாண இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 4 மாதங்களில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 72 விசைப்படகுகளைக் கைப்பற்றி 450-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைப் பிடித்துள்ளனர்.
அவ்வப்போது மீனவர்களை மட்டும் விடுதலை செய்தாலும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிப்பதே இல்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட் டனர்.
இலங்கை அரசால் விடுவிக் கப்படாத தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் யாழ்ப்பாணம், ஊர்காவல்துறை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. இதில் மழையால் படகு களில் நீர் புகுந்து சில படகுகள் மூழ்கிவிட்டன.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக் கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள இரும்பு வியாபாரிகளுக்கு ஏலம் விடப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி கூறியதாவது:
கடந்த 2004-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் 62 படகுகள் கைப்பற்றப்பட்டு அவை இலங்கை அரசுடைமையாக்கப் பட்டன. இதில் சிலப் படகுகள் இலங்கை வடமாகாண கூட்டுறவுச் சங்களுக்கு வழங் கப்பட்டிருந்தன.
42 படகுகள்
மேலும் கடற்பகுதியில் விடப்பட்டி ருந்த நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படகுகள் பல நீரில் மூழ்கின. இதில் பயன்பாட்டுக்கு உபயோகம் இல்லாத 42 படகு களை அகற்றுமாறு இலங்கை கடற்தொழில் அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை யாழ்ப்sபாணத்தில் உள்ள இரும்புக் கடைகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன’’ என்றார்.