தமிழகம்

4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் இன்று திறக்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஆஎஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த 4 அம்மா உணவகங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்க இருக்கிறார்.

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று திறந்து வைக்கிறார். அதன்பின் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்க உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வர இருப்பதால், அந்த மருத்துவமனையில் பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT