காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 2-ம் தேதி (வியாழன்) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் தனியார் கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.