தமிழகம்

வரும் 19-ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

வரும் 19-ம் தேதி நடைபெற இருந்த அருங்காட்சியகப் பொறுப்பாளர் பணிக்கான தேர்வு 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் ஐஏஎஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியகப் பொறுப்பாளர் பணிக்கான (Curator in Museum Department) தேர்வை  வருகின்ற 19-ம் தேதி அன்று நடத்துவதாக அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வருகின்ற 19-ம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இத்தேர்தலைக் கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காகவும் 19-ம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியகப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 25.05.2019  அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

இத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 தேர்வு மையங்களில் வரும் 25-ம் தேதி அன்று நடைபெறும்'' என்று நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT