தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒடிசா அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT