ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2-ஐ எழுத விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 1 தேர்வினை எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.
2-ம் தாளான 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு, பட்டப்படிப்பில் 45 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதற்காக www.trb.tn.nic.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.5 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்ததையடுத்து, ஏப்.12 வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.