பிளஸ் 2 பொதுத் தேர்வில், 95.37 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19-ம் தேதி முடிவடைந்தது. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. . தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.
இதில் மாவட்ட அளவில், 95.37 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடமும், 95.23 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடமும், 95.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. காரைக்கால் மாவட்டம், 84.87 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதம்:
கன்னியாகுமரி - 94.81%
திருநெல்வேலி - 94.41%
தூத்துக்குடி - 94.23%
ராமநாதபுரம் - 92.30%
சிவகங்கை - 93.81%
விருதுநகர் - 94.44%
தேனி - 92.54%
மதுரை - 93.64%
திண்டுக்கல் - 90.79%
ஊட்டி - 90.97%
திருப்பூர் - 95.37%
கோயம்புத்தூர் - 95.01%
ஈரோடு - 95.23%
சேலம் - 90.64%
நாமக்கல் - 94.97%
கிருஷ்ணகிரி - 86.79%
தருமபுரி - 89.62%
புதுக்கோட்டை 90.01%
கரூர் - 94.07%
அரியலூர் - 89.68%
பெரம்பலூர் - 95.15%
திருச்சி - 93.56%
நாகப்பட்டினம் - 87.45%
திருவாரூர் - 86.52%
தம்ஞ்சாவூர் - 91.05%
விழுப்புரம் - 85.85%
கடலூர் - 88.45%
திருவண்ணாமலை - 88.03%
வேலூர் - 85.47%
காஞ்சிபுரம் - 89.90%
திருவள்ளூர் - 89.49%
சென்னை - 92.96%
காரைக்கால் - 84.87%
புதுச்சேரி - 91.22%