தமிழகம்

சென்னையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு இன்று நேர்காணல்

செய்திப்பிரிவு

சென்னையில் செயல்பட்டு வரும் 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள கஸ்தூரிபாய் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இன்று (20-ம் தேதி) நடக்கிறது.

மருத்துவ உதவி பணியாளர் பதவிக்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 3 வருட அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன், பிளஸ்-2 வில் அறிவியல் பாடம் பயின்றிருத்தல் அவசியம். மேலும் செவிலியர் பிரிவில் 3 மற்றும் 2 ஆண்டுகள் பயின்றவர்களும் குறைந்த பட்சமாக 1 ஆண்டு (அரசு பொது மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள் மட்டும்) நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர் பணிக்கு 23 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், உயரம் 162.5 செ.மீக்கும் குறையாமல், குறைந்தது 3 வருட அனுபவம் (எல்எம்வி.யில்) ஓட்டுனர் உரிமம் பெற்று, கனரக வாகன உரிமத்திற்கான பயிற்சி / பதிவு நகல் (எல்எல்ஆர்) இருத்தல், மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது தேர்ச்சி பெறாதவர். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வருதல் அவசியம்.

SCROLL FOR NEXT