தமிழகம்

தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தான்; பாஜக அல்ல: எச்.ராஜா பதிலடி

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலை நடத்தவிடாமல் சீர்குலைக்கவே எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜகவை விமர்சித்த கொடியேறி பாலகிருஷ்ணனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் எச்.ராஜா.

முன்னதாக நேற்று (புதன்கிழமை), கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், ''தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், போர்ச் சூழலை உருவாக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தேர்தலை நாசப்படுத்த எண்ணுகிறது.

மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பாஜக ஊகித்துவிட்டது. இதன் மூலம் அவசர நிலையை அமல்படுத்தி, தேர்தலை நிறுத்த முயல்கிறது" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியே வான்வழித் தாக்குதலை வரவேற்றுள்ளார். கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பேச்சு மூலம் தான் ஒரு தகுதியில்லாத அரசியல்வாதி என்பதை நிரூபித்திருக்கிறார்.

எல்லையில் நடந்தது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மட்டுமே. போரை நாங்கள் வேண்டி விரும்பவில்லை. தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தானே தவிர பாஜக அல்ல" என்றார்.

SCROLL FOR NEXT