புயல் நிவாரணம் வழங்கப்பட வில்லை என்று கூறி, நாகை ஆட்சி யர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதேபோன்று, ஆறுகாட்டுத்துறையில் கண் காணிப்பு கோபுரத்தில் ஏறி மீனவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் மீனவ கிராமத்தில் கஜா புயல் வீசியபோது, கூரை மற்றும் ஓட்டு வீடுகள், பைபர் படகுகள், வலைகள் கடுமை யாக சேதமடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட படகு மற்றும் வலைகளுக்கு ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், அந்த நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்பட வில்லை என குற்றம்சாட்டி, ஏராள மான ஆண்களும், பெண்களும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கீழையூர் போலீஸாரிடம் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ரேஷன் கார்டு ஆகிய வற்றை ஒப்படைத்தனர். கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல, புயலால் சேத மடைந்த படகுகளுக்கு அரசு நிவார ணம் வழங்கவில்லை என்று கூறி ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடற்கரையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட் டனர். வேதாரண்யம் போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவி னருடன் சம்பவ இடத்துக்கு வந்து, கிராமபோன் உதவியுடன் மீனவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச் செய்தனர்.