தமிழகம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் தமிழகத்தில் 15 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 15 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உள்​துறை செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்த உத்​தர​வு: சென்னை காவலர் நலன் பிரிவு துணை ஆணை​யர் டி.கண்​ணன் தாம்​பரம் காவல் ஆணை​யரக தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாகப்​பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், தாம்​பரம் மத்​திய குற்​றப்​பிரிவு துணை ஆணை​யர் ஏ.வேல்​முரு​கன் காவல்​துறை நவீனமய​மாக்​கல் பிரிவு உதவி ஐஜி-​யாக​வும், காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த ஜி.ஸ்​டா​லின் தாம்​பரம் மத்​திய குற்​றப்​பிரிவுக்​கும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல், காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டி.ரமேஷ் பாபு தீவிர​வாத தடுப்பு பிரிவு எஸ்​பி-​யாக​வும், அதே​போல் காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த வி.​வி.கீ​தாஞ்​சலி பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த பி.சுந்​தர​வடிவேல் சென்னை பாது​காப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், மதுரை தீவிர​வாத தடுப்பு பிரிவு எஸ்பி ஆர்​.ரமேஷ் கிருஷ்ணன் திருப்​பூர் வடக்கு துணை ஆணை​ய​ராக​வும், தமிழ்​நாடு கமாண்டோ படை எஸ்பி கே.மகேஷ்வரி செங்​குன்​றம் துணை ஆணை​ய​ராக​வும் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் கோயம்​பேடு துணை ஆணை​யர் உதயகு​மார் திருவண்ணா​மலை எஸ்​பி-​யாக​வும், அங்​கிருந்த ஏ.சி.கார்த்திகேயன் அடை​யாறு காவல் துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த நியமனங்களைத் தவிர ராம​நாத​புரம் கீழக்​கரை சப்​-டிவிஷன் உதவி எஸ்பி குணால் உத்​தம் ஷ்ரோதே பதவி உயர்வு பெற்று கோயம்​பேடு துணை ஆணை​ய​ராக​வும், நாமக்​கல் சப்​-டிவிஷன் உதவி எஸ்பி ஆகாஷ் ஜோஷி பதவி உயர்வு பெற்று திருப்​பூர் தெற்கு துணை ஆணை​ய​ராக​வும், மதுரை திரு​மங்​கலம் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி அன்​ஷுல் நாகர் பதவி உயர்வு பெற்று திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்​பூர் காங்​கே​யம் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி அர்​பிதா ராஜ்புத் சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்​பி​யாக​வும், திருச்சி திரு​வெறும்​பூர் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி பனாவத் அரவிந்த் திருச்சி வடக்கு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT