தமிழகம்

சபரிமலை சீசனுக்கு 260 சிறப்பு ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையில் மொத்தம் 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை - கொல்லம் தடத்தில் மட்டுமே 244 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட சிறப்பு ரயில்களில் பெரும்பாலும் ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்வே கோட்டங்கள் சார்பிலும் சிறப்பு ரயில்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தெற்கு மத்திய ரயில்வே சார்பில் 18 சிறப்பு ரயில்களும், கிழக்கு மண்டல ரயில்வே சார்பில் 26 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை - திரு வனந்தபுரம் (12697/12698) வாரந் திர விரைவு ரயில்கள் செங்கானூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் (தற்காலிக நிறுத்தம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT