தமிழகம்

கைதிகளுக்கு இன்சூரன்ஸ்: முதல்கட்டமாக 3600 பேர் சேர்ப்பு

செய்திப்பிரிவு

இன்சூரன்ஸ் திட்டங்களில் தமிழக சிறைக் கைதிகள் சேர்க்கப் படுவார்கள் என்று சிறைத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழக சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதி களை இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா கூறிய தாவது: தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் மத்திய அரசின் இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களில் சேர்க்கப்படுகின்றனர். முதல்கட்ட மாக தண்டனைக் கைதிகளில் சுமார் 3,600 பேரை இந்த திட்டத்தில் சேர்க்க இருக்கிறோம்.

புழல் மத்திய சிறையில் உள்ள 450 கைதிகள், வேலூர் சிறையில் 260 கைதிகள், பாளையங்கோட்டை சிறையில் 168 கைதிகள் மற்றும் புழல், திருச்சி சிறையில் உள்ள 32 பெண் கைதி கள் தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இப்பணிகளை 2 வாரத்துக்கு முன்பு தொடங்கி னோம். தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

தகுதி வாய்ந்த அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இன் னும் 2 வார காலத்தில் சேர்க்கப் படுவார்கள். மேலும் இன்ஸ் சூரன்ஸ் திட்டத்தை சிறைத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய 2 இன்ஸ் சூரன்ஸ் திட்டங்களை செயல் படுத்த இருக்கிறோம். அதன்படி, விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண் டும். கைதி விபத்தில் இறந்தால் அவ ரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப் பீடு வழங்கப்படும். சிறையில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு வழங்கப்படும் சம்பள தொகையில் இருந்து காப்பீட்டு தொகை செலுத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT