தமிழகம்

திருச்சி | விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 14 வயது பள்ளி சிறுவன் கொலை

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி அருகே விளை​யாட்​டின்​போது ஏற்​பட்ட தகராறில் 14 வயது மாணவர் கொலப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. துறையூர் வட்​டம் நல்​ல​வன்​னிபட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் சரவணன் மகன் செல்​வம் (14). 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நேற்று முன்​தினம் மாலை நல்​ல​வன்​னிபட்​டி​யில் நண்​பர்​களு​டன் வாலி​பால் விளை​யாடி​னார். அப்​போது, செல்வத்​துக்​கும், அதே ஊரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறு​வனுக்​கும் தகராறு ஏற்​பட்​டது.

          

இதில், அந்​தச் சிறு​வன் தாக்​கிய​தில் செல்​வத்​துக்கு தலை​யில் படுகாயம் ஏற்​பட்​டது. ஆனால், இதை வீட்​டில் சொல்​லாமல் உறங்​கிய செல்​வம், நேற்று மயங்கி விழுந்​துள்ளார்.

இதையடுத்​து, பெற்​றோர் அவரை துறையூர் அரசு மருத்​து​வ​மனைக்கு தூக்​கிச் சென்​ற​போது, மருத்​து​வர்​கள் பரிசோ​தித்து செல்​வம் இறந்​து விட்​ட​தாத் தெரி​வித்தனர்.

இதைத்​தொடர்ந்​து, செல்​வத்தின் உடல், பிரேத பரிசோதனைக்​காக திருச்சி மருத்​து​வ​மனைக்​கு அனுப்பப்​பட்​டது. இதுகுறித்து புலிவலம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து கொலை செய்​த​தாக 15 வயது சிறு​வனை கைது செய்து திருச்சி சிறார் கூர்​நோக்கு இல்​லத்​தில்​ அடைத்​தனர்​.

SCROLL FOR NEXT