சென்னை: சென்னையில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி, திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு செய்தபோது, நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் பாதையில் மழைநீர் தேங்குவதாக தொலைபேசி வழியாக புகார் வந்தபோது, அவரே பேசி குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நேரில் வென்று மாநகராட்சியின் நடவடிக்கையை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி, “சமூக வலைதள புகார்கள், தொலைபேசி வழியாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று பார்வையிட்டேன். நானும் மாநகராட்சி ஆணையரும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியருடன் ஆலோனை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். நிவாரண மையங்களும் தயாராக உள்ளன. உணவு தேவைப்படும் இடங்களுக்கு காலையில் உணவும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுகளின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் கவுஷிக் உள்
ளிட்டோர் உடன் இருந்தனர்.