தமிழகம்

முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதா? - வைகோ கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்டும் முயற்சிக்கு மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்டுள்ள அறிக்​கை​: முல்லை பெரி​யாறு அணை தொடர்​பாக கேரள பாது​காப்புபிரி​கேட் என்ற தன்​னார்வ நிறு​வனம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், முல்லை பெரி​யாறு நீர்த்​தேக்க மட்​டத்தை உடனடி​யாகக் குறைக்க வேண்​டும். தேவைப்​பட்​டால், அணை​யைச் செயலிழக்​கச் செய்​வதற்கோ அல்​லது அணை புனரமைப்பு திட்​டத்​தைத் தயாரிப்​ப​தற்கோ வழி​முறை​கள் உரு​வாக்க உத்​தர​விட வேண்​டும் என்று கோரப்​பட்​டுள்​ளது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி கே.​வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு அக்​.13-ம் தேதி விசா​ரணை மேற்​கொண்​டது. அப்​போது அணையை வலுப்​படுத்த சில உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படலாம் அல்​லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்​கலாம் அல்​லது புதிய அணை கட்​டு​வதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆராய​லாம். எனவே, இந்த வழக்​கில் மத்​திய அரசு மற்​றும் தமிழக, கேரள அரசுகள் பதில் அளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை நீதிப​தி​கள் ஒத்​தி​வைத்​தனர். உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த உத்தரவு தமிழகத்​துக்கு பாதகத்தை ஏற்​படுத்​தும்.

அணை​யின் உறு​தித் தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதி​மன்​றம், முன்​னாள் நீதிபதி ஏ.எஸ்​. ஆனந்த் தலை​மை​யில் அமைத்த குழு, கடந்த 2012-ம் ஆண்டு சமர்​பித்த அறிக்​கை​யில் முல்லை பெரி​யாறு அணை உறு​தி​யாக இருப்​ப​தால், வேறு புதிய அணை கட்​டத் தேவை இல்​லை, நிலநடுக்​கம் ஏற்​பட்​டாலும், அணை​யின் நீர் மட்​டத்தை 152 அடி​யாக உயர்த்​தி​னாலும் பாதிப்​பு இல்லை என தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் முல்லை பெரி​யாறு அணையை இடித்​து​விட்​டு, உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு எதி​ராக புதிய அணை கட்ட முயற்​சிக்​கும் கேரள மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரி​கேட் போன்ற அமைப்பு​கள் மூல​மாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. கேரள அரசின் இந்த சதித்திட்​டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT