தமிழகம்

508 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு விவகாரம்: கரூர் ஆட்சியர், எஸ்​.பி. உட்பட 17 பேர் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: கரூரில் கோயிலுக்கு சொந்தமான 508 ஏக்கர் நிலத்தை மீட்பது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கரூர் ஆட்சியர், எஸ்.பி. உட்பட 17 பேர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்​பாக சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்​பவர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த நீதி​மன்ற அவம​திப்பு மனு​வில், "கரூர் வெண்​ணெய்​மலை பாலசுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான 507.88 ஏக்​கர் நிலத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க வேண்​டும்" என்று வலி​யுறுத்தி இருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் வேல்​முரு​கன், புகழேந்தி அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: கோயில் நில ஆக்​கிரமிப்பை அகற்​று​வது தொடர்​பாக நீதி​மன்​றம் உத்​தர​விட்டு 6 ஆண்​டு​களாகி​யும் இது​வரை நீதி​மன்ற உத்​தரவை அதி​காரி​கள் நிறைவேற்​ற​வில்​லை.
ஆக்​கிரமிப்​பு​களை அகற்றும் பணிக்கு மாவட்ட நிர்​வாகம் மற்​றும் காவல் துறை தரப்​பில் போதிய ஒத்​துழைப்பு இல்லை என்று அறநிலை​யத் துறை சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த வழக்​கில் கரூர் எஸ்​.பி. எதிர்​மனு​தா​ரராக சேர்க்​கப்​படு​கிறார்.

அறநிலை​யத் துறை ஆணை​யர் முரளிதரன், மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி., மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் வரும் 17-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராகி, விளக்​கம் அளிக்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT