சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஒரு வாரத்தில் மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் வீடு​களில் வளர்க்​கப்​படும் நாய்​களுக்​கும் மைக்​ரோசிப் பொருத்​தும் பணி ஒரு வாரத்​தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்​டத்​தில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​தார். சென்னை மாநக​ராட்சி மாமன்ற கூட்​டம், மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டம் தொடங்​கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்​கு, அனை​வரும் எழுந்து நின்று மவுன அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் கூட்​டத்​தில் பேசிய மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் பலர் நாய் தொல்​லை​யைக் கட்​டுப்​படுத்த வலி​யுறுத்​தினர். மைக்​ரோசிப் பொருத்​தும் பணி​யின் தற்​போதைய நில​வரம் மற்​றும் பயன்​கள் குறித்து கேள்வி எழுப்​பினர்.

அதற்கு மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் அளித்த பதில்: மாநக​ராட்சி சார்​பில் பிடிக்​கப்​படும் தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை செய்​யும்​ போது மைக்ரோ சிப், நாயின் உடலில் பொருத்​தப்​பட்டு வரு​கிறது. வீடு​களில் வளர்க்​கப்​படும் நாய்​களுக்​கும் மைக்ரோ சிப் பொருத்​தும் பணி அடுத்த வாரம் தொடங்​கப்பட உள்​ளது.

இந்த மைக்ரோ சிப்​பில் நாய்​களின் இனப்​பெயர், அங்க அடை​யாளம், உரிமை​யாளர் பெயர், ரேபிஸ் நோய்க்கு தடுப்பு ஊசி செலுத்​தப்​பட்ட விவரம் உள்​ளிட்​டவை பதிவு செய்​யப்​படும். மாநக​ராட்சி சார்​பில் புளியந்​தோப்​பு, திரு.​வி.க.நகர், லாயிட்ஸ் காலனி, கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம், நுங்​கம்​பாக்​கம் ஆகிய 6 இடங்​களில் செல்​லப்பிராணி​களுக்​கான சிகிச்சை மையங்​கள் மாநக​ராட்சி சார்​பில் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

அங்கு கொண்​டு​வரப்​படும், வீட்டு நாய்​களுக்​கும் மைக்​ரோசிப் பொருத்​து​வது, ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்​தும் பணி​கள் இலவச​மாக மேற்​கொள்​ளப்​படும். அண்​மைக்​கால​மாக வெளி​நாடு​களைச் சேர்ந்த உயர்ரக நாய்​களை ஆசை​யாக வாங்​கி​விட்​டு, பராமரிப்பு செலவு அதி​க​மாக இருப்​பதை உணர்ந்து அவற்றை தெரு​வில் விட்​டு​விடு​கின்​றனர். வளர்ப்பு நாய்​களுக்கு சிப்​களை பொருத்​தும்​போது, இது​போன்று வளர்ப்பு நாய்​களை தெரு​வில் விடு​வது யார் எனக் கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இக்​கூட்​டத்​தில் 2024-25 கல்​வி​யாண்​டில் மாநக​ராட்சி பள்​ளி​களில் 10 மற்​றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்​வு​களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்​கிய ஆசிரியர்​கள், 2025-26 கல்​வி​யாண்​டின் விடு​முறை நாட்​களில் திருச்சி என்​ஐடி உள்​ளிட்ட இடங்​களுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்து செல்​லப்பட உள்​ளனர். இதற்​கான முன்​பண​மாகரூ.20 லட்​சம் ஒதுக்க அனு​மதி வழங்கி தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. பருவ மழை தொடங்​கவுள்​ள​தால், 81 இடங்​களில் மோட்டார்பம்​பு​களை இயக்க 189 எலக்ட்​ரீஷியன்​கள், 240 உதவி​யாளர்​கள் ஆகியோரை 120 நாட்​களுக்கு தற்​காலிக​மாக நியமிக்க கூட்​டத்​தில் அனு​மதி வழங்​கப்​பட்​டது.

மேலும் பள்​ளிக்​கரணை​யில் 30 டன் திறன், மணலி மண்​டலம் சின்ன சேக்​காட்​டில் 50 டன் திறன் கொண்ட பிளாஸ்​டிக் பேலிங் மையங்​கள் அமைக்​க​வும், மாநக​ராட்சி பள்​ளி​களில் 141 உடற்​கல்வி ஆசிரியர்​களை தற்​காலிக​மாக பணி​யமர்த்​த​வும், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​துக்கு பின்​புறம் ரூ.9.80 கோடி​யில் மயானம் அமைக்​க​வும்.

மருத்​துவ முகாம்​களுக்​கான உபகரணங்​களை கொண்டு செல்​ல​வும், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களுக்கு மருந்​துகளை கொண்டு செல்​ல​வும் சிஎன்​ஜி-ல் இயங்​கும் 15 வாக​னங்​களை ரூ.1.85 கோடி​யில் வாங்​க​வும், செனாய் நகரில் உள்ள வீட்​டு​வசதி வாரிய குடி​யிருப்​புக்கு சொந்​த​மான விளை​யாட்​டுத் திடலுக்கு பாவேந்​தர் பார​தி​தாசன் பெயர் சூட்​ட​வும் அனு​மதி வழங்கிதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இக்​கூட்​டத்​தில்​ மொத்​தம்​ 65 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

SCROLL FOR NEXT