தமிழகம்

சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்கள்: கடல்சார் வாரியம் ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் 1,069 கி.மீ. நீளக்​கடற்​கரை பகு​தி​யில் சாத்​தி​ய​மான இடங்​களில் சிறு துறை​முகங்​களை உரு​வாக்​கு​வதற்கான சாத்​தி​யக் கூறுகளை கடல்​சார்​வாரி​யம் ஆய்வு செய்து வரு​வ​தாக அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​துள்ளார்.

கடல்​சார் வாரி​யத்​தின் 97-வது வாரிய கூட்​டம், அமைச்​சர் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​ய​தாவது: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் பொருளா​தார வளர்ச்சி என்ற இலக்கை அடைய, சிறு துறை​முகங்​கள் மூலம் வணி​கம் மற்​றும் சுற்​றுலா வளர்ச்​சிப்​பெற வழி​வகை செய்ய வேண்​டும்.

தமிழகம் தொழில் முனை​வோருக்​கான முன்​னோடி மாநில​மாக உள்​ளது. இதன் அடிப்​படை​யில் தனி​யார் முதலீட்டு துறை​முகங்​கள் அமைக்க மிக​வும் சாத்​தி​ய​மான மாநில​மாக தமிழகம் உள்​ளது. தமிழ்​நாடு கடல்​சார் வாரி​யம் 1,069 கி.மீ., நீளக்​கடற்​கரை பகு​தி​யில் சாத்​தி​ய​மான இடங்​களில் சுற்​றுப்​புறச் சூழல் மற்​றும் மீன்​பிடி வாழ்​வா​தா​ரங்​கள் பாதிக்​கப்​ப​டா​மல் பல்​வேறு சிறு துறை​முகங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் மேம்​படுத்​துதல் ஆகிய​வற்றை உரு​வாக்​கு​வதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆராய்ந்து வரு​கிறது.

மத்​திய அரசின் சாகர்​மாலா திட்​டத்​தின்​கீழ், கடலூர் துறை​முகத்தை மேம்​படுத்தி 37 ஆண்​டு​களுக்​குப் பிறகு, தற்​போது​தான் அதை இயக்​கு​வதற்​கான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. விவே​கானந்​தர் பாறை மற்​றும் திரு​வள்​ளுவர் சிலையை இணைக்​கும் கண்​ணாடிப் பாலம், பொது மக்​களின் பேராதரவை பெற்​றுள்​ளது. இது​வரை பல லட்​சம் சுற்​றுலா பயணி​கள் பார்​வை​யிட்​டுள்​ளனர்.

ராமேசுவரம் – தலைமன்​னார் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்​தைத் தொடங்க கருத்​துருக்​கள், மத்​திய அரசுக்கு அனுப்​பப்​பட்டு நிதி​யுதவி கோரப்​பட்​டுள்​ளது. இந்த 2024- 25 ம் ஆண்​டில், தமிழ்​நாடு கடல்​சார் வாரியக் கட்​டுப்​பாட்​டிலுள்ள சிறு​துறை​முகங்​களில் 12 மில்​லியன் டன் சரக்​கு​கள் கையாளப்​பட்​டுள்​ளன.

இக்​கூட்​டத்​தில், கடல்​சார் வாரி​ய துணைத் தலை​வர் டி.என்​.வெங்​கடேசன், நெடுஞ்​சாலைத் துறை செயலர் இரா.செல்​வ​ராஜ், போக்​கு​வரத்து துறை செயலர் சுஞ்​சோங்​கம் ஜடக்​சிரு, பொதுப்​பணித் துறை செயலர் மங்​கத்​ராம் சர்மா, தொழில்​துறை செயலர் வி.அருண்​ராய், சிப்​காட் மேலாண் இயக்​குநர் கே.செந்​தில்​ராஜ், மீன்​வளத் துறை செயலர் சுப்​பையன், துறை​முக அலு​வலர் கேப்​டன் எம்​.அன்​பரசன்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT