தமிழகம்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் மேற்​கொள்ள வேண்​டும், பழைய நிலை இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களாக மழைக்​காலத்​தின் போது, சென்​னை​யில் பல இடங்​களில் மழைநீர் வடி​யாமல் தேக்​கமடைந்​த​தால் சுகா​தா​ரத்​தி​லும், போக்​கு​வரத்​தி​லும் பொதுமக்கள் பெரும் சிரமத்​துக்கு உள்​ளாகினர்.

சென்னை மட்​டுமல்ல திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, மதுரை, கடலூர் என பல மாவட்​டங்​களில் மழைக்​காலத்​தில் பொது​மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டனர். இதற்​கெல்​லாம் காரணம், தமிழக அரசு மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் முறை​யாக மேற்​கொள்​ளாதது தான்.

அதே நிலை இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது. எனவே, இந்த ஆண்​டிலா​வது மழைக்​கால பாதிப்​பில் இருந்து மக்​களை பாது​காக்க தமிழக அரசு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் தொடங்க வேண்​டும். மழைக்​காலம் தொடங்​கி​விட்​ட​தால் பொது ​மக்​களை பாது​காக்​கும் வகை​யில் திட்​டங்​களை வகுத்து செயல்​படுத்த வேண்​டும்.

அந்​தவகை​யில், தமிழகம் முழு​வதும் அனைத்து பகு​தி​களி​லும் சாலை வசதி, மின்​சார இணைப்​பு, அரசுப் பேருந்​துகளில் மேற்​கூரை, மரங்​கள், அரசின் கட்​டிடங்​கள், கல்வி நிறு​வனக் கட்​டிடங்​கள், நேரடி நெல்​கொள்​முதல் நிலை​யங்​கள் என அனைத்து இடங்களி​லும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

முக்​கிய​மாக, வடி​கால் பணி​கள், சுகா​தா​ரப் பணி​கள் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். தமிழகம் முழு​வதும் மழைக்​காலத்​தில் ஏற்​படும் புயல், வெள்​ளத்​தில் தங்​களைப் பாது​காத்​துக்​கொள்​வதற்​கான விழிப்​புணர்வை மக்​களுக்கு ஏற்​படுத்த வேண்​டும்.

பொது​மக்​கள் மழை​யால் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க ஏற்​க​னவே தொடங்கி இன்​னும் முழு​மையடை​யாமல் இருக்​கும் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும். அனைத்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை​யும் காலம் தாழ்த்​தாமல் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT