சென்னை ஐஐடி மற்றும் திங்க் இந்தியா அமைப்பு சார்பில் ‘தக்‌ஷினபதா மாநாடு 2025’ நேற்று தொடங்கியது.இதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஐஐடி இயக்குநர் காமகோடி நினைவு பரிசு வழங்கினார். படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்களின் கல்விமுறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி, ‘திங்க் இந்​தி​யா’ அமைப்பு சார்​பில்‘தேசிய மறுமலர்ச்​சிக்​கான தொழில்​முனைவு மற்​றும் செயற்கை நுண்​ணறி​வு’ என்ற தலைப்​பிலான 2 நாள் மாநாடு (தக்​‌ஷினபதா 2025) நேற்று தொடங்​கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது: சுதந்​திரம் அடைந்​த​போது உலகப் பொருளா​தா​ரத்​தில் 5-வது இடத்​தில் இருந்​தோம். பிறகு படிப்​படி​யாக பின்​தங்கி 11-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டோம். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும் புதிய இந்​தியா பிறந்​தது. தற்​போது உலகப் பொருளா​தா​ரத்​தில் 4-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளோம். வறுமை, வன்​முறை குறைந்​துள்​ளது.

கடந்த 2014-ல் 400 ஸ்டார்ட்​-அப்நிறு​வனங்​கள் மட்​டுமே இருந்த நிலை​யில், தற்​போது அந்த எண்​ணிக்கை 2 லட்​சத்தைதாண்​டி​யுள்​ளது. வேக​மாக வளரும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை நாட்​டின் வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு பயன்​படுத்த வேண்​டும். முன்பு வெளி​நாட்டு ஆதா​ரங்​களையே நமது ராணுவம் சார்ந்​திருந்​தது. பாகிஸ்​தானின் அணுஆ​யுத மிரட்​டலுக்கு முந்​தைய ஆட்​சி​யாளர்​கள் அச்​சப்​பட்​டனர். தற்​போது நிலைமை மாறிவரு​கிறது. ராணுவ ரீதி​யில் பலம்​பொருந்​திய நாடாக இந்​தியா உரு​வெடுத்து வரு​கிறது. ‘ஆபரேஷன் சிந்​தூர்’ மூலம் நமது ராணுவ பலத்தை உலகுக்கு காட்​டி​யுள்​ளோம். முந்​தைய ஆட்​சி​யாளர்​கள் இது​போன்ற துணிச்​சலான நடவடிக்​கையை எடுத்​திருக்க சாத்​தி​யமே இல்​லை.

பாரதம் 5 ஆயிரம் ஆண்​டு​கள் பழமை வாய்ந்​தது. இங்கு வியா​பாரத்​துக்கு வந்த ஆங்​கிலேயர்​கள் நமது பண்​பாடு, கலாச்​சா​ரத்தை அழித்​தனர். சுதந்​திரம் அடைந்த பிறகும், அவர்​களது கல்​வி​முறையை பின்​பற்​று​வது வேதனைக்​குரியது. ஆன்​மிகம்​தான் இந்த தேசத்​தின் ஆன்​மா. ஒவ்​வொரு இளைஞரும் இந்த நாட்​டின் சொத்​து. அவர்​களது பங்​களிப்பு மூலம் நாடு மிகப்​பெரிய வளர்ச்சி அடை​யும். சில அமைப்​பு​கள் பாரதம் குறித்து தவறான கருத்​துகளை பரப்​பு​கின்​றன. தேசத்தை சிதைக்கமுயற்சி செய்​கின்​றனர். நாம்பல்​வேறு சவால்​களை கவன​மாக எதிர்​கொண்டு வந்​துள்​ளோம். நம் நாட்​டில் பல்​வேறு மொழிகள் பேசும் மக்​கள் இருந்​தா​லும், நம் இதயத் துடிப்பு ஒன்​று​தான். பல்​வேறு உணவு முறை​கள், கலாச்​சா​ரங்​கள் இருந்​தா​லும் பாரதம் ஒன்​று​தான். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT