தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகத்​தின் சென்னை மண்டல இயக்​குநர் ஏ.வேணுகோ​பால் 
தமிழகம்

தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தொழில் நிறு​வனங்​கள், ஊழியர்​கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டத்​தில் இணைவது குறித்த விழிப்​புணர்வு முகாம் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் நடந்​தது. தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களின் பதிவை ஊக்​குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டத்தை தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்​கி​யுள்​ளது.

இத்​திட்​டம் குறித்து மாவட்​டந்​தோறும் விழிப்​புணர்வு முகாம் நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்​தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் விழிப்​புணர்வு முகாம் நேற்று நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகத்​தின் சென்னை மண்டல இயக்​குநர் ஏ.வேணுகோ​பால் தலைமை தாங்கி​னார்.

துணை இயக்​குநர்​கள் சதீஷ்கு​மார், ஸ்ரீனி​வாசன், அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ஜி.ர​விச்​சந்​திரன், செயற்​குழு உறுப்​பினர் டி.சேது​ராமன் உள்​ளிட்ட தொழில் துறை​யினர், ஊழியர்​கள் பலர் கலந்து கொண்​டனர். நிகழ்ச்​சி​யில், ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் குறித்​தும், இத்​திட்​டத்​தில் யாரெல்​லாம் பயன்​பெறலாம், திட்​டத்​தில் இணைய எப்​படி பதிவு செய்​வது, முதலா​ளி​கள், பணி​யாளர்​களுக்​கான நன்​மை​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டது.

இதையடுத்து செய்​தி​யாளர்​களிடம் வேணுகோ​பால் கூறுகை​யில், “தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் ஸ்ப்ரீ திட்​டத்தை அறி​முகம் செய்​துள்​ளது. இது அனைத்து முதலா​ளி​களும் தங்​களைப் பதிவு செய்​து​கொள்ள ஊக்​கு​விப்​ப​தற்​காக வடிவ​மைக்​கப்​பட்​ட​தாகும். இதில் தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள் அவற்​றின் ஊழியர்​களை பதிவு செய்​து​கொள்​ளலாம்.

டிச.31-ம் தேதி வரை, ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டம் அமலில் இருக்​கும். இதன் மூலம் முந்​தைய காலப் பதிவு, தாமத​மான பதிவு குறித்த எவ்​வித ஆய்​வும் இருக்​காது. மேலும் எந்த ஒரு பங்​களிப்பு தொகை​யும் கோரப்​ப​டாது. 10 அல்​லது அதற்கு மேற்​பட்ட ஊழியர்​கள் பணிபுரி​யும் அனைத்து கடைகள், நிறு​வனங்​கள், பள்​ளி​கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம்'' என்றார்.

SCROLL FOR NEXT