தமிழகம்

கொலை முயற்சி வழக்கில் கைதான ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: ​கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஏர்​போர்ட் மூர்த்​தி​யின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை, டிஜிபி அலு​வல​கம் அருகே நின்று கொண்​டிருந்த புரட்சி தமிழகம் கட்​சி​யின் தலை​வ​ரான ஏர்​போர்ட் மூர்த்​திக்​கும், விடு​தலை சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி​கள் சிலருக்​கும் இடையே கடந்த செப்.6 அன்று கைகலப்பு ஏற்​பட்​டது.

இந்த அடிதடி சம்​பவம் தொடர்​பாக இருதரப்​பும் போலீ​ஸில் புகார் அளித்​தனர். விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யினர் அளித்த புகாரின்​பேரில், போலீ​ஸார் ஏர்​போர்ட் மூர்த்​தியை கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​தனர். பின்​னர், அவரை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க, மாநகர காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்டார்.

இந்​நிலை​யில், ஏர்​போர்ட் மூர்த்தி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எஸ். கார்த்​தி​கேயன் முன்​பாக நடந்​தது.

அப்​போது ஏர்​போர்ட் மூர்த்தி தரப்​பில், அரசி​யல் ரீதி​யாக பழி​வாங்​கும் நோக்​கில் தன் மீது பொய்​வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும், தன்னை தாக்​கிய​வர்​களை விட்​டு​விட்டு தன்​மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​தாக​வும், எதிர்​தரப்​பில் யாரை​யும் கைது செய்​ய​வில்லை என்​றும் குற்​றம் சாட்​டப்​பட்​டது. அப்​போது அரசு தரப்​பில், மனு​தா​ரர் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் சிறையி்ல் அடைக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, அவரது ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளார்​.

SCROLL FOR NEXT