தமிழகம்

ஜவுளி நிறுவனத்தில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்: வருமான வரித் துறை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல ஜவுளி நிறு​வனத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.31 கோடி ரொக்​கம், தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளதாக வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிப்​புத்​தூரில் சிறிய ஜவுளி கடை​யாக தொடங்​கப்​பட்​டு, தற்​போது தமிழகத்​தின் முக்​கிய நகரங்​கள் மட்டுமின்றி பல்​வேறு மாநிலங்​களி​லும் கிளை​களைத் தொடங்​கி, ஜவுளி, நகை வியா​பாரங்​களை பிரபல ஜவுளி நிறு​வனம் செய்து வரு​கிறது. இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அந்​நிறு​வனத்​துக்கு சொந்​த​மான இடங்​களில் கடந்த 12-ம் தேதி வரு​மான வரி துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

சென்னை தி.நகரில் உள்ள அந்​நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கம், ஜி.என்​.செட்டி தெரு​வில் உள்ள ஜவுளி கடை, தெற்கு உஸ்​மான் சாலை​யில் உள்ள கடை, குரோம்​பேட்​டை​யில் உள்ள நகை கடை, ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் ஜவுளி நிறு​வனத்​தின் உரிமையாளர் வீடு, கிழக்கு கடற்​கரை சாலை கானத்​தூர், நீலாங்​கரை​யில் உள்ள உரிமை​யாளரின் மகன்​கள் வீடு, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது.

4 நாட்களாக சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடத்​தப்​பட்​ட​தாக வரு​மான வரி அதி​காரி​கள் தெரி​வித்​திருந்​தனர். சுமார் 200-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரி அதி​காரி​கள், துணை ராணுவப்​படை பாது​காப்​புடன் இந்த சோதனை​யில் ஈடுபட்டிருந்தனர்.

இந்​நிலை​யில், தொடர்ந்து 4 நாட்​களாக நடந்து வரும் இந்த சோதனை​யில், பல்​வேறு இடங்​களில் தற்​போது வரை கணக்​கில் வராத ரூ.20 கோடி ரொக்​கம், ரூ.11 கோடி மதிப்​பிலான 10 கிலோ தங்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக வரு​மான வரி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். மேலும், பல இடங்​களில் சோதனை தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தால், சோதனை முழு​மை​யாக முடிவடைந்த பிறகு அதி​காரப்​பூர்வ தகவல் வெளி​யிடப்​படும் எனவும் அதி​காரி​கள் வட்​டாரத்​தில் கூறப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT