தமிழகம்

சென்னையில் 2 நாட்கள் விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி காவல் ஆணையரிடம் தவெக மனு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக தலை​வர் விஜய் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு மக்​களை சந்​தித்து வரு​கிறார். கடந்த 13-ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை தொடங்​கிய விஜய், அன்​றைய தினம் திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் செய்ய திட்​ட​மிட்​டிருந்​தார். ஆனால், வழியெங்​கும் அதி​கள​வில் தொண்​டர்​கள் திரண்​ட​தால், குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் அனு​மதி வழங்​கப்​பட்ட இடங்​களுக்கு விஜய்​யால் செல்ல முடிய​வில்​லை.

இதனால், திருச்​சி, அரியலூரில் மட்​டும் மக்​கள் சந்​திப்பை நடத்​தி​விட்​டு, பெரம்​பலூர் செல்​லாமல், விஜய் சென்னை திரும்​பி​னார். இந்​நிலை​யில், சென்​னை​யில் விஜய் 2 நாட்​கள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். இதற்​காக, சென்னை மாவட்ட செய​லா​ளர் அப்​புனு தலை​மை​யில் தவெக நிர்​வாகி​கள் காவல் ஆணை​யர் அருணிடம் அனு​மதி கோரி நேற்று மனு அளித்​தனர்.

அதன்​படி, செப்​.27-ம் தேதி வட சென்​னை​யிலும், அக்​.25-ம் தேதி தென் சென்​னை​யிலும் சாலை மார்க்​க​மாக சென்று விஜய் மக்​களை சந்​திக்க உள்​ளார். முல்லை நகர், அகரம், ராயபுரம், புளியந்​தோப்​பு, கொருக்​குப்​பேட்​டை, ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்​கு, தியாக​ராய நகர், எம்​.ஜி.ஆர். நகர், சைதாப்​பேட்​டை, மயி​லாப்​பூர், கண்​ணகி நகர், ஆலந்​தூர், வேளச்​சேரி, வில்​லி​வாக்​கம், அயனாவரம், அம்​பத்​தூர், மதுர​வா​யில் ஆகிய இடங்​களில் மக்​களை சந்​தித்து விஜய் பேசு​வார் என்று அந்த மனு​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, இதற்​கான உரிய போலீஸ் பாது​காப்பு வழங்​க வேண்​டும் என்​றும், உரிய அனு​ம​தி​யும் கொடுக்​க வேண்​டும் என்​றும் மனு​வில் தவெக​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT