தமிழகம்

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டும் வாக்குறுதி என்னவானது? - திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: ஒவ்​வொரு ஆண்​டும் உரிய வசிப்​பிடம் இல்​லாமல் புயல்​வெள்ள பாதிப்​பில் சிக்​கித் தவிக்​கும் மீனவர்​களை பாது​காக்​கும் வித​மாக, கடற்​கரையோரப் பகு​தி​களில் 2 லட்​சம் புதிய குடி​யிருப்​பு​கள் கட்​டித்​தரப்​படும் என்று 2021 தேர்​தலின்​போது அளித்த வாக்​குறுதி எண் 116, முதல்​வர் ஸ்டா​லினுக்கு ஞாபகமிருக்​கிற​தா?

பல நூறு கோடி ரூபாய் செல​வில் கடற்​கரையோரத்​தில் பேனா சிலை அமைக்க ஆர்​வம் காட்​டிய திரா​விட மாடல், நான்கு ஆண்​டு​களாகி​யும் மீனவர்​களுக்​கென ஒரு வீடு​கூட கட்​டித்​த​ராதது ஏன், வாக்​குறு​தியை மறந்​து, மீனவர்​களை தத்​தளிக்​க​விட்​டு, மீண்​டுமொரு முறை ஆட்​சியை மட்​டும் பிடிக்க திட்​ட​மிடு​வது வெட்​கக்​கே​டாக இல்​லை​யா?

ஆட்சி அரியணை​யைக் கைப்​பற்​றும் ஆசை​யில் அளவில்​லாமல் வாக்​குறு​தி​களை அளித்​து​ விட்​டு, ஆட்சி முடி​யும் வரை வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாமல் வெற்று விளம்​பரங்​களை மட்​டும் ஆரவார​மாக வெளி​யிடும் திமுக அரசுக்கு வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீனவ பெரு​மக்​கள் மொத்​த​மாக முடிவு கட்​டு​வர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT