தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு: டெண்டர் கோரியது மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்மை பணி​யாளர்​களுக்கு 3 வேளை​யும் இலவச உணவு வழங்​கும் திட்​டத்​துக்​காக ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து,மாநக​ராட்சி டெண்​டர் கோரி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலத்​துக்​குட்​பட்ட தூய்மை பணியை தனி​யாரிடம் ஒப்​படைத்​தது மாநக​ராட்​சி. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அந்த இரு மண்​டலங்​களை சேர்ந்த தூய்மை பணி​யாளர்​கள் தொடர்ந்து 13 நாட்​களாக மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் அவர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டு, அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இச்​சம்​பவம் தமிழகம் முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இதற்கு பல்​வேறு கட்​சிகளும், அமைப்​பு​களும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஆக.14-ம் தேதி நடந்த அமைச்​சரவை கூட்​டத்​தில் தூய்மை பணி​யாளர்​கள் நலனுக்​காக 6 சிறப்பு திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதன்​படி தூய்மை பணி​யாளர்​கள் பணி​யின் போது உயி​ரிழந்​தால் அவர்​களது குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும், நகர்ப்​புற தூய்மை பணி​யாளர்​களுக்கு காலை உணவு, அந்​தந்த நகராட்​சிகளின் மூலம் இலவச​மாக வழங்​கப்​படும் உள்​ளிட்ட திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அந்​தவகை​யில் சென்னை மாநகரில் தினசரி பணி​யில் இருக்​கும் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தூய்மை பணி​யாளர்​களுக்கு காலை, மதி​யம், இரவு என 3 வேளை​யும் உணவு வழங்​கும் வகை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது. அதன்​படி இந்த திட்​டத்​துக்​காக ஆண்​டுக்கு ரூ.50 கோடி வீதம் 3 ஆண்​டு​களுக்கு ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து, இந்த திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​காக உணவு தயாரித்து வழங்​கும் நிறு​வனங்​களை தேர்வு செய்ய, சென்னை மாநக​ராட்சிடெண்​டர் கோரி​யுள்​ளது.

SCROLL FOR NEXT