கோப்புப் படம் 
தமிழகம்

சென்னையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்: வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை என வேதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யின் பல்​வேறு இடங்​களில் தொடர்ந்து 5-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் தேடி, தேடி கைது செய்து வரு​கின்​றனர். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்​துள்​ளதைக் கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக் கோரி​யும் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 13 நாட்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் கைது செய்​யப்​பட்டு அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இதையடுத்து செப்​.4-ம் தேதி சிந்​தா​திரிப்​பேட்டை மே தினப் பூங்​கா​வில் திடீரென ஒன்று கூடிய 300-க்​கும் மேற்​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் உடனடி​யாக கைது செய்​தனர்.

தூய்​மைப் பணி​யாளர்​களின் நடவடிக்​கைகளை போலீ​ஸார் தீவிர​மாக கண்​காணித்து வந்த நிலை​யில் கொருக்​குப்​பேட்டை அம்​பேத்​கர் நகரில் கடந்த 8-ம் தேதி 13 தூய்​மைப் பணி​யாளர்​கள் தங்​களது வீட்​டருகே உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. அவர்​கள் கைது செய்​யப்​பட்டு அப்​புறப்​படுத்​தப்​பட்ட நிலை​யில், 9-ம் தேதி சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் பின்பு (மாநக​ராட்சி அரு​கே) அதே 13 பேர் மீண்​டும் திரண்டு உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அவர்​களை போலீ​ஸார் மீண்​டும் கைது செய்​தனர். இதையடுத்து 10-ம் தேதி மெரினா உழைப்​பாளர் சிலை முன்​பும், 11-ம் தேதி ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அம்​பேத்​கர் சிலை முன்​பும் அதே 13 பேர் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டனர்.

இதில் 3 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​வ​தாகக் கூறப்​படும் நிலை​யில், மீத​முள்ள 10 பேர் தொடர்ந்து 5-வது நாளாக கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கம் அருகே இருக்​கும் மணி​யம்​மை​யார் சிலைக்கு மனு கொடுக்​கும் நூதன போராட்​டத்​தில் நேற்று ஈடு​பட்​டனர்.

அப்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் கூறுகை​யில், “கடந்த 2 மாதங்​களாக வேலை​யின்றி கஷ்டப்​பட்டுக் கொண்டிருக்கிறோம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடிய​வில்​லை. நாங்​கள் செய்து வந்த வேலையை தானே கேட்​கிறோம். எங்களது உரிமையை கேட்​டுத்​தானே போராடு​கிறோம். இதற்​காக தொடர்ந்து 5 நாட்​களாக தண்​ணீரைத் தவிர வேறு ஏதும் சாப்​பி​டா​மல் போராடி வரு​கிறோம். எங்​களில் 3 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதெல்​லாம் ஏன் முதல்​வரின் காதுகளில் விழ​வில்​லை. வேலை கிடைக்​கும் வரை, எங்​களது உயிர் போகும் வரை போராடு​வோம்” என்று கண்​ணீர் மல்க தெரி​வித்​தனர். பின்​னர் போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு அறி​வுறுத்​தி​ய​போது, அவர்​கள் கலைந்து செல்ல மறுத்​த​தால், போலீ​ஸார் அவர்​களை குண்​டுக்​கட்​டாக கைது செய்​தனர்.

இவ்​வாறு தொடர்ந்து தூய்​மைப் பணியாளர்​கள் சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் போராட்​டங்​களை நடத்​து​வதும், அவர்​களை போலீ​ஸார் தேடி, தேடி கைது செய்​வதும், மாலை​யில் அவர்​களை விடு​விப்​பதும் தொடர் கதை​யாகி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT