தமிழகம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது: அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கன்​னி​யாகுமரி விவே​கானந்​தர் சிலை - திரு​வள்​ளுவர் சிலை இடையி​லான கண்​ணாடிப்​பாலம் மிக​வும் பாது​காப்​பாக உள்​ள​தாக பொதுப்​பணித்​துறை அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, அவர் நேற்று தலை​மைச்​செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கன்​னி​யாகுமரி​யில் விவே​கானந்​தர் சிலைக்​கும், திரு​வள்​ளவர் சிலைக்​கும் செல்​லும் கண்​ணாடி பாலம் கட்​டப்​பட்ட பிறகு சுமார் 17 லட்​சம் பொது மக்​கள் பார்​வை​யிட்​டுள்​ளனர். அவ்​வப்​போது முறை​யான பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

கடந்த ஆக.16-ம் தேதி பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொண்ட போது, 8 மீட்​டர் உயரத்​தில் ஆர்ச்​சில் உள்ள போல்​டு​களை சரி செய்​யும் பொழுது சுத்​தி​யல் கை தவறி விழுந்​த​தில் கண்​ணாடி​யின் மேல் பகு​தி​யில் மட்​டும் மெல்​லிய விரிசல் ஏற்​பட்​டது. உடனடி​யாக சேதமடைந்த இடத்​தில் மட்​டும் பாத​சா​ரி​கள் பாது​காப்பு கருதி தடுப்பு அமைக்​கப்​பட்​டது.

விரிசல் ஏற்​பட்ட இடத்​தில் 2 மீட்​டர் நீளம், 2.40 மீட்​டர் அகலம், கொண்ட அதே வடிவ​மைப்பில் அதே தரத்​துடன் கம்பி இழையி​லான கண்​ணாடி கடந்த செப்​.8-ம் தேதி பொருத்​தப்​பட்​டது. மேலும், போது​மான எடையைக் கொண்டு பரிசோதனை மேற்​கொள்​ளப்​பட்டு தாங்​குத்​திறன் உறுதி செய்​யப்​பட்​ட​தில் கண்​ணாடி பாது​காப்​பாக உள்​ளது. 77 மீட்​டர் நீள​முடைய கண்​ணாடி பாலம், ஒரேநேரத்​தில், 650 பேர் செல்​லக்​கூடிய வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

10 ஆண்டு பராமரிப்பு

மேலும், ஒப்​பந்​த​தா​ரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு என்​ப​தால், சேதமடைந்த கண்​ணாடி ஒப்​பந்​த​தா​ரரின் செல​விலேயே சரி செய்​யப்​பட்​டு​விட்​டது. தற்​போது, அனைத்து பார்​வை​யாளர்​களும், கண்​ணாடி பாலத்​தைப் பார்​வை​யிட்டு வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த செய்​தி​யாளர் சந்​திப்​பின்​போது, நெடுஞ்​சாலைத் துறை செயலர் இரா.செல்​வ​ராஜ், இயக்​குநர் ஆர்​.செல்​லத்​துரை, நெடுஞ்​சாலைத் துறை சிறப்பு தொழில்​நுட்ப அலு​வலர் இரா.சந்​திரசேகர்​ ஆகியோர்​ உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT