முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ‘காவலர் நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர். | படங்கள்: ம.பிரபு | 
தமிழகம்

முதல்வர் தலைமையில் காவலர் நாள் உறுதி ஏற்பு: டிஜிபி, ஆணையர் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் ‘காவலர் நாள்’ உறு​தி​மொழி ஏற்கப்பட்டது. இதில் டிஜிபி, காவல் ஆணை​யர் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீ​ஸார் பங்​கேற்​றனர்.

இந்​தாண்டு ஏப்​ரல் 29-ம் தேதி சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத் தொடரில், முதல்​வர் பேசும்​போது, “முதன் முதலாக 1859-ம் ஆண்​டில் மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டத்தை நிறைவேற்​றி, நவீன மற்​றும் அமைப்பு ரீதி​யான காவல்​துறை தோற்​று​விக்​கப்​பட்ட செப். 6-ம் நாள் இனி ஆண்​டு​தோறும் காவலர் நாளாகக் கொண்​டாடப்​படும்” என்று அறி​வித்​தார்.

அதன்​படி, முதல் காவலர் நாள் கொண்​டாட்​டங்​களைக் குறிக்​கும் வகை​யில், அனைத்து காவல் நிலை​யங்​களி​லும் உறு​தி​மொழி ஏற்​பு, பணி​யின்​போது உயிரிழந்த காவல்​துறை​யினருக்கு அஞ்​சலி செலுத்​துதல், காவல்​துறை​யின் செயல்​பாடு​களை பொது​மக்​களிடம் கொண்டு செல்​வது, காவல் குடும்​பங்​கள் மற்​றும் சமூகத்தை உள்​ளடக்​கிய கலாச்​சார நிகழ்​வு​கள் உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்ச்​சிகள் மாவட்​டங்​கள் மற்​றும் நகரங்​களில் நடை​பெற்​றன.

அதனைத் தொடர்ந்​து, முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில், சென்​னை, எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று காவலர் நாள் விழா 2025-ல், காவலர் நாள் உறு​தி​ மொழி ஏற்​கப்​பட்​டது. முதல்​வர் உறுதி மொழியை வாசிக்க, மைதானத்​தில் கூடி​யிருந்த போலீ​ஸார் அதை திரும்ப கூறினர். மேலும், காவலர் நாள் விழாவை முன்​னிட்டு நடை​பெற்ற போட்​டிகளில் கலந்​து கொண்டு வெற்​றி​பெற்ற காவலர் குடும்​பங்​களை சேர்ந்த மாணவ, மாணவி​களுக்கு பரிசுகளை முதல்​வர் வழங்கி பாராட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட​ராமன், சென்னை காவல் ஆணை​யர் அருண், கூடு​தல் காவல் ஆணை​யர்​கள் கண்​ணன், பிர​வேஷ்கு​மார், கார்த்​தி​கேயன், ராதிகா உள்பட பலர் கலந்து கொண்​டனர். ‘உல​கில் பல சிறப்பு தினங்​கள் கொண்​டாடப்​பட்​டாலும் போலீ​ஸாருக்​கென்று ஒரு தினம் இல்​லாமல் இருந்​தது.

அந்த குறையை முதல்​வர் போக்​கி​யுள்​ளார். ஓய்​வின்றி உழைக்​கும் காவலர்​களுக்​கென்​றும், அவர்​கள் கொண்​டாடு​வதற்​கும், அவர்​களை கொண்​டாடு​வதற்​கும் ஒரு நாள் வேண்​டும் என்று அறி​வித்த முதல்​வருக்கு நன்​றி. காவலர்​கள் சிறப்​பாக பணி செய்ய இது மேலும் ஊக்​குவிக்​கும்’ என்று டிஜிபி வெங்​கட​ராமன்​, சென்​னை காவல்​ ஆணை​யர்​ அருண்​ ஆகியோர்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT