தமிழகம்

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களில் நேற்று 79-வது சுதந்​திர தினம் தேசி​யக் கொடியேற்றி விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. விழா​வில், சிறப்​பாகப் பணி​யாற்றி ஊழியர்​களுக்கு பரிசுகளும் வழங்​கப்​பட்​டன. சென்னை, கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணி​யாளர்​களின் குழந்​தைகளுக்கு அவர் சுதந்​திர தின வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். லட்​சுமி ரவி உடனிருந்​தார். தொடர்ந்து காந்தி மண்​டபத்​தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்​கும் ஆளுநர் மரி​யாதை செலுத்​தி​னார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, தேசி​யக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்​எப் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றார். நிகழ்​வில், நீதிப​தி​கள், ஓய்வு பெற்ற நீதிப​தி​கள், சட்​டத்​துறை அமைச்​சர் ரகுப​தி, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன்​முகமது ஜின்​னா, மாநில அரசு ப்ளீடர் எட்​வின் பிர​பாகர் உள்​ளிட்ட அரசு வழக்​கறிஞர்​கள், தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால், சென்னை காவல் ஆணை​யர் அருண் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலில் நடை​பெற்ற விழா​வில் பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் தேசி​யக் கொடியேற்​றி​னார். நிகழ்​வில், எம்​.பி.க்​கள் ஐ.எஸ்.இன்​பதுரை, ஆர்​.சு​தா, பார் கவுன்​சில் துணைத் தலை​வர் வி.​கார்த்​தி​கேயன், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்க செய​லா​ளர் ஆர்​.கிருஷ்ணகு​மார், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் செய​லா​ளர் திரு​வேங்​கடம், லா அசோசி​யேஷன் தலை​வர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

போர் நினை​விடத்​தில் தென்​னிந்​திய பகு​தி​களுக்​கான ராணுவத் தளபதி லெப்​டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். உடன் தமிழக, புதுச்​சேரி கடற்​படை அதி​காரி சதீஷ் ஷெனாய், தாம்​பரம் விமானப்​படை கமாண்​டிங் அதி​காரி தபன் சர்மா உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர். சென்னை அல்​லிக்​குளம் நீதி​மன்ற வளாகத்​தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்றுக் கொண்​டார். நிகழ்​வில் நீதிப​தி​ கள் மூர்த்​தி, சண்​முகசுந்​தரம், தோத்​திரமேரி உள்​ளிட்ட நீதித்​துறை அதி​காரி​கள் பங்​கேற்றனர்.

சென்னை விமான நிலைய இயக்​குநர் சி.​வி.தீபக், தேசி​யக் கொடியேற்​றி​னார். திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள தமிழ்​நாடு பாரத சாரண, சாரணி​யர் இயக்​கத் தலை​மையகத்​தில் துணை முதல்​வரும் இயக்க புர​வலரு​மான உதயநிதி ஸ்டா​லின் தேசி​யக் கொடியேற்​றி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். சென்​னை, ரிப்​பன் மாளி​கை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மேயர் ஆர்​.பிரியா தேசி​யக்கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

உடன் ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். சென்னை ஆட்​சி​யரகத்​தில் ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தேசி​யக் கொடியேற்​றியதைத் தொடர்ந்​து, பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை​யும் வழங்​கி​னார். கோ​யம்​பேட்​டில் உள்ள மாநில தேர்​தல் ஆணை​யத்​தில் மாநில தேர்​தல் ஆணை​யர் பா.ஜோதி நிர்​மலா​சாமி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். ஆணைய செயலர் கி.​பாலசுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் உடனிருந்​தார். பசுமை வழிச்​சாலை​யில் மாநில மனித உரிமை​கள் ஆணைய உறுப்​பினர் வி.கண்​ண​தாசன் தேசி​யக் கொடியேற்​றி​னார். ஆணை​யத்​தின் பதி​வாளர் கபீர், புல​னாய்​வுப் பிரிவு இயக்​குநர் மல்​லிகா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பெரம்​பூரில் நடை​பெற்ற நிகழ்​வில், தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் தேசி​யக் கொடியேற்​றி​னார். நிகழ்​வில் கூடு​தல் பொது​மேலா​ளர் கவுசல் கிஷோர், ஆர்​பிஎப் முதன்மை தலைமை பாது​காப்பு ஆணை​யர் கே.அருள் ஜோதி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். ஐசிஎப் வளாகத்​தில் பொது​மேலா​ளர் யு.சுப்​பா​ராவ், அயனாவரத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் தேசி​யக் கொடியேற்​றினர்.

தேனாம்​பேட்​டை, டிஎம்​எஸ் வளாகத்​தில் தொழிலா​ளர் ஆணை​யர் சி.அ.​ராமன் கொடியேற்​றி​னார். மின்​வாரிய தலை​மையகத்​தில் வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். எழும்​பூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையகத்​தில் மேலாண் இயக்​குநர் த.பிரபு சங்​கர் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​யதைத் தொடர்ந்​து, சிறப்​பாகப் பணி​யாற்​றிய ஊழியர்​களுக்கு பரிசுகளை வழங்​கி​னார்.

நுங்​கம்​பாக்​கம் அலு​வல​கத்​தில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறுவன மேலாண் இயக்​குநர் ஆர்​.​வி.ஷஜீவனா தேசி​யக் கொடியேற்​றி​னார். முதன்மை தலைமை வனப் பாது​காவலர் அலு​வல​கத்​தில் முதன்மை தலைமை வனப் பாது​காவலர் சீனி​வாச ஆர்​.ரெட்டி தேசி​யக் கொடி ஏற்றி வைத்து உரை​யாற்​றி​னார். தாட்​கோ தலை​மையகத்​தில் தலைவர் நா.இளைய​ராஜா கொடியேற்​றி​னார்.

SCROLL FOR NEXT