தமிழகம்

ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணிப்பு: தமிழகத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் பல்​கலைக்​கழக மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காதது, துணைவேந்​தர் நியமன விவ​காரம் ஆகிய​வற்​றில் ஆளுநர் ஆர்​.என்​. ர​வி​யின் செயல்​பாடு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வித​மாக, சுதந்​திர தினத்​தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்​கும் தேநீர் விருந்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்க மாட்​டார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழக மக்​களின் நலன்​களுக்கு எதி​ராக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடர்ந்து கருத்து தெரி​வித்​து, செயல்​பட்டு வரு​கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வித​மாக, ஆகஸ்ட் 18, 19-ம் தேதி​களில் நடை​பெறும் அழகப்பா மற்​றும் திரு​வள்​ளுவர் பல்​கலைக்​கழகங்​களின் பட்​டமளிப்பு விழாக்​களில், முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தலின்​படி பங்​கேற்​கப் போவ​தில்லை என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணத்​தில் கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​கான மசோ​தா, சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டது. அவர் அதற்கு ஒப்​புதல் அளிக்​காமல், தாமதப்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தோடு குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைத்​துள்​ளார்.

அரசியல் சார்பு தன்மை: அது​மட்​டுமன்​றி, பல்​கலைக்​கழகங்​களின் சட்​டம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வரலாற்​றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை தமிழக அரசு பெற்ற பிறகு, பாஜக நிர்​வாகி குட்டி (எ) வெங்​க​டாசலபதி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து தடை உத்​தரவை பெற்​றார். அந்த தடை உத்​தரவை நீக்க உச்ச நீதி​மன்​றத்தை தமிழக அரசு நாடி​யுள்​ளது.

இந்த சூழலில், பாஜக பிர​முகர் தெரி​வித்த கருத்​துகளை ஆதரிக்​கும் வகை​யில், ஆளுநர் முந்​திக்​கொண்டு போய் உச்ச நீதி​மன்​றத்​தில் வாதுரை தாக்​கல் செய்​துள்​ளார். இது அவரது அரசி​யல் சார்​புத்தன்​மையை அப்​பட்​ட​மாக வெளிக்​காட்​டு​வதோடு, அவரது ஒருதலை பட்​ச​மான நடவடிக்​கைக்​கும் ஒரு உதா​ரண​மாக உள்​ளது.

தமிழகத்​தில் பல்​வேறு பல்​கலைக்​கழங்​களில் இன்று துணைவேந்​தர்​கள் இல்​லாமல் மாணவர்​களின் உயர்​கல்வி பாதிக்​கப்​படும் நிலை​மைக்கு ஆளுநரின் செயல்​பாடு​களும், அவர் போட்​டு​வரும் முட்​டுக்​கட்​டைகளும்​தான் காரணம். இந்த சூழ்​நிலை​யில், கிண்டி ஆளுநர் மாளி​கை​யில் ஆகஸ்ட் 15-ம் தேதி (இன்​று) நடை​பெறும் தேநீர் விருந்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்க மாட்​டார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

எதிர்க்கட்சிகளும் புறக்கணிப்பு: சுதந்​திர தினத்​தையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் சார்​பில் இன்று மாலை நடை​பெறும் தேநீர் விருந்​தில் பங்​கேற்​கு​மாறு முதல்​வர், அமைச்​சர்​கள், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், சிறப்பு விருந்​தினர்​களுக்கு ஏற்​கெனவே அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தேநீர் விருந்தை புறக்​கணிக்​கப்​போவ​தாக திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக உள்​ளிட்ட கட்​சிகள் ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளன.

விஜய்​யின் தவெக​வுக்​கும் அழைப்பு அனுப்​பப்​பட்ட நிலை​யில், ஆளுநரின் செயல்​பாடு​களை கண்​டித்து தேநீர் விருந்தை புறக்​கணிப்​ப​தாக அக்​கட்​சி​யும்​ தற்​போது அறி​வித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT